பாரீஸ் சென்ற அமெரிக்க விமானங்கள் திசைதிருப்பப்பட்டன: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமா?

291
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் இருந்து பாரீஸ் சென்ற இரு விமானங்கள் திசைதிருப்பப்பட்டுள்ளன.பாரீஸ் தாக்குதலையடுத்து அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நோக்கிச் சென்ற இரு பயணிகள் விமானங்கள் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இன்று வேறுபாதையில் திசைதிருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற ஒரு விமானம் மற்றும் கனடா நாட்டில் உள்ள ஹலிபாக்ஸ் நகருக்கும், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற மற்றொரு விமானம் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் நகரத்துக்கும் திசைதிருப்பி அனுப்பப்பட்டதாகவும், அவ்விரு விமானங்களும் அங்கு பத்திரமாக தரையிறங்கியதாகவும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

இவ்விமானங்கள் தரையிறங்கியதும் அதில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக விமானங்களில் இருந்து இறங்கிச் செல்வதை காண முடிந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE