தெற்கு அதிவேக வீதியினூடாக 2296 கிலோ பாவனைக்குதவாத தேயிலையை கொண்டு சென்ற இளைஞர்கள் முறையும் லொறியையும் பொலிஸார நேற்று கைது செய்துள்ளனர்.
அதனைக் கொண்டு சென்றவர்கள் ஹெம்மாத்தகம,வெளிமடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இரு இளைஞர்களையும் தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் வைத்து பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக லொறி பத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.