பிஞ்சு குழந்தைக்கு இரசாயன கலவை ஊட்டிய பிரித்தானிய தாய்

346
பிரித்தானியாவில் தாய் ஒருவர் தமது பிஞ்சு குழந்தைக்கு இரசாயன கலவையை ஊட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு லண்டனில் குடியிருக்கும் 17 வயது இளம்பெண் ஒருவர் தமது கர்ப்பத்தை பெற்றோரிடம் இருந்து மறைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் தமது குளியல் அறையில் வைத்து அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை அங்கிருந்து மறைவு செய்யும் பொருட்டு அதற்கு தரையை சுத்தம் செய்யும் இரசாயன கலவையை ஊட்டியுள்ளார்.

இதனிடையே திடீரென்று குளியலறைக்குள் வந்த அவரது உறவினர், அந்த இளம்பெண்ணின் செய்கை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவரிடம் இருந்து குழந்தையை பறித்துக்கொண்ட அந்த உறவினர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார்.

இதனையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் அந்த இளம் தாயாரை கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது கொலை குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனால் நீதிமன்ற விசாரணையை அடுத்து அந்த இளம் பெண் மீது குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறி கொலை குற்றத்தில் இருந்து அவர் தப்பித்துள்ளார்.

குற்றவாளியின் வயது மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள நீதிமன்றம்,

குழந்தை பிறந்ததும் ஏற்பட்ட அச்சம் மற்றும் அதிர்ச்சி காரணமாக குழந்தைக்கு மிக குறைவான அளவு இரசாயன கலவை ஊட்டியதாக கூறிய காராணத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளது. தண்டனை விவரத்தை அடுத்த மாதம் அறிவிக்க இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SHARE