பிஞ்சு குழந்தையுடன் பயிற்சியில் ஈடுபட்ட காளை சண்டை வீரர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

279
ஸ்பெயின் நாட்டில் காளை சண்டை வீரர் ஒருவர் தனது பிஞ்சு குழந்தையுடன் பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெயின் நாட்டின் பிரபல காளை சண்டை வீரரான Francisco Rivera என்பவர் தான் தமது குழந்தையுடன் பயிற்சியில் ஈடுபட்டவர்.

இவர் தனது பிஞ்சு குழந்தையுடன் பயிற்சியில் ஈடுபடுவதை புகைப்படமெடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் தமது குடும்பத்தினர் 5 தலைமுறையாக இந்த காளை சண்டை விளையாட்டில் ஈடுபட்டு வருவதாகவும்,

தமது தாத்தா இதேப் போன்று தம்முடன் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், தமது தந்தையும் இதேப் போன்று பயிற்சி மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் தமது மகளுடன் இதேப்போன்று பயிற்சியில் ஈடுபட்ட்தாக கூறும் அவர் தற்போது தமது மகனுடன் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருவேறான கருத்துகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமது குழந்தையை மிக ஆபத்தான பகுதிக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறும் சிலர், இது போன்ற செயல்களை எந்த தாயும் விரும்ப மாட்டாள் என்றுள்ளனர்.

ஆனால் சிலர் இந்த புகைப்படத்தை மிக உயர்வாக கருதுவதாகவும் உன்னத கலைஞர்களால் மட்டுமே இதுபோன்று செயல்பட முடியும் எனவும் சிலாகித்துள்ளனர்.

SHARE