பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்த வாரம் கூடவுள்ளது.

257

 

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்த வாரம் கூடவுள்ளது.FB_IMG_1451041460415
இந்த வாரத்தில் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக கட்சியன் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமது அதிகாரங்கள் முழு அளவில் நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி யாப்பு மாற்றம் தொடர்பில் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும்கட்சியின் 19ம் பொதுக் கூட்டத்தில் ஹசன் அலி பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாம் பொதுச் செயலாளராக பதவி வகித்த போதிலும் உரிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை எனவும் தமது அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் ஹசன் அலி விசனம் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் கட்சிக்குள் பாரியளவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், கட்சியின் முரண்பாடுகளை களையும் நோக்கில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

SHARE