கடந்த 01.10.2016 அன்று மாரடைப்பு காரணமாக உயிரழந்த வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனிஜெகநாதனின் உடலம் இன்று (06.10.2016) வியாழக்கிழமை மு.ப 11.00 மணிக்கு அன்னாரது இல்லத்திலிருந்து பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் பொது மக்களின் அஞ்சலிக்காக கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில்(முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்னால்) வைக்கப்பட்டு அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாணசபை அவைத்தலைவர் அமைச்சர்கள் உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்களென ஆயிரத்துக்கும் அதிகமானோர் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பாடசாலைமாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் பி.ப 4.00 மணியளவில் முல்லைத்தீவு புனித இராயப்பர் தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து உன்ணாப்புலவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.