புகலிட கோரிக்கையாளர் பயணித்த படகு விபத்து, குழந்தைகள் உள்ளிட்ட 33 பேர் பலி!

294

 

ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு வர முயற்சித்த புகலிட கோரிக்கையாளர் படகு விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்ளிட்ட குறைந்தது 33 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 75 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் லெஸ்போஸ் தீவுக்கு வரமுயற்சித்ததாக கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 20 பேரைக் காணவில்லை என்று உயிர்தப்பிய ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் லெஸ்போஸ் தீவுக்கு வந்துசேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE