கிளிநொச்சி – பூநகரி, பள்ளிக்குடா பகுதியில் ஸ்ரீலங்கா கடற்படைக்கென காணி சுவீகரிக்கும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்தார்.
பள்ளிக்குடா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா கடற்படையின் தேவகளுக்கு எனத் தெரிவித்து 1/2 ஏக்கர் காணி சுவீகரிக்கும் நோக்கில் நில அளவீட்டாளர்களுடன் கடற்படையினர் இன்று காலை குறித்த பகுதிக்குச் சென்றுள்னர்.
எனினும் பிரதேச மக்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து கடற்படையினர் தமது நடவடிக்கையை கைவிட்டுச்சென்றுள்ளனர்.
இதேவேளை கடந்த திங்கட்கிழமை பூநகரிப் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிக்கும் நடவடிக்கை பொது மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.