பெற்றோர் துன்புறுத்தியதால் தலைமறைவான சிறுவன்

294
உக்ரைன் நாட்டில் பெற்றோர் துன்புறுத்துவதாக கூறி தலைமறைவான 10 வயது சிறுவன் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளான்.உக்ரைன் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள Cherkasy எனும் நகரில் தாயுடன் வாழ்ந்து வந்த Bogdan Furman எனும் சிறுவன் திடீரென்று ஒரு நாள் தலைமறைவானான்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள பொலிஸ் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

பொலிசார் பல மாதங்கள் தேடியும் சிறுவன் குறித்து எவ்வித தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை,

இதனையடுத்து, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் கும்பல் கடத்தி சென்றிருக்கலாம் எனவும், அவர்களிடம் இருந்து சிறுவன் தப்புவது கடினம் எனவும் பொலிசார் தெரிவித்த தகவலால் அந்த குடும்பம் அதிர்ச்சியடைந்தது.

இதனிடையே Dnieper நதிக்கரையில் தானாகவே உருவாக்கிய ஒரு சிறு குடிலில் 10 வயதேயான சிறுவன் Bogdan தங்கியிருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து சிறுவனை அங்கிருந்த மீட்டு வந்த பொலிசார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குடித்து விட்டு அதிகமாய் துன்புறுத்தும் தாய் மற்றும் தந்தையால் அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை என சிறுவன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.

காணாமல் போன தமது மகனை உயிருடன் மீட்டு வந்த பொலிசாருக்கு நன்றி தெரிவித்த அவனது தாயார், இனி தாம் தமது மகனை துன்புறுத்துவதில்லை என தெரிவித்துள்ளார்.

SHARE