பேராசிரியர் வீட்டு வேலைக்கார சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்

274

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி இருந்த பேராசிரியர் ஒருவரின் வீட்டில் 16 வயது சிறுமி ஒருவர் வேலைபார்த்து வந்தார்.சிறுமி ஒரு வருடத்திற்கும் மேலாக அவரது வீட்டில் பணி புரிந்து வருகிறார்.

கடந்த திங்கட்கிழமை சிறுமியை 4 பேர் கடத்தி சென்று கற்பழித்து உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கடந்த திங்கட் கிழமை இரவு போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது அதில் ஒரு சிறுமி ஒருவர் கடுமையான வயிற்று வலிகாரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக கூறினர். போலீசார் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர் விசாரணையில் அந்த சிறுமி திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு தான் பல்கலைகழக வளாகத்தில் இருந்து மார்கெட்டுக்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது சில வாலிபர்கள் ஒரு வெள்ளை நிற காரில் வந்து மார்க்கெட்டில் இறக்கி விடுவதாக் கூறி அழைத்து சென்றனர்.

பின்னர் எனக்கு குளிர்பானம் கொடுத்தார்கள் அப்போது நான் அரைமயக்கத்தில் இருந்தேன். என்னை ஒரு பகுதிக்கு கொண்டு சென்று 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர் என கூறி உள்ளார்.

இந்த நிலையில் சிறுமியை வேலைக்கு வைத்த பேராசிரியர் மீது சிறுமியை அடிமைத்தனமாக வைத்திருத்தல், குழந்தை தொழிலாளர் ஆகிய பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீஸ் நிலையம் முன் ஜவர்ஹர்லால நேரு பல்கலைகழக மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Professors

SHARE