சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக ஹசீஸ் என்ற போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரை பதுளை, எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் ஒன்றின் உதவியுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் ஆலோசனையின் பேரில் எல்ல நகரில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோப்ப நாய் சந்தேக நபர் மீது பாய்ந்து மோப்பம் பிடித்துள்ளது.
இதனையடுத்து அந்த நபரை சோதனையிட்ட போது, அவரிடம் இருந்து 3500 மில்லி கிராம் ஹசீஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.