போதைப் பொருட்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர்

239

போதைப் பொருட்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரை பீடித்துள்ள போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படாது எவ்வளவு வீடுகளை நிர்மானித்தாலும் பலனில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வீடுகளை நிர்மானிப்பதனை போன்றே போதைப் பொருள் இல்லாதொழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாளிகாவத்தையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE