மகனின் பிணத்துடன் வாழ்ந்து வந்த பெற்றோர்: நடந்தது என்ன?

278

 

ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு பகுதியில் இறந்த மகனின் உடலுடன் பெற்றோர் வாழ்ந்து வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Girona எனும் இடத்தில் குடியிருந்து வருபவர்கள் Bruce and Shrell Hopkins தம்பதியர்.

இவர்களது 7 வயது மகன் Caleb ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு அதிக துன்பம் அனுபவத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சிகிச்சை ஏதும் பலனளிக்காமல் Caleb உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த Bruce and Shrell தம்பதியினர் உயிரிழந்த தங்களது மகனின் உடலுடன் கடந்த 2 மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனிடையே, இவர்கள் தங்கியிருந்த குடியிருப்பின் வாடகை பணத்தை பெற்றுக்கொள்ள வந்த வீட்டின் உரிமையாளருக்கு அவர்களின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தினால் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த குடியிருப்பில் விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்ட பொலிசார், சிதைந்த நிலையில் காணப்பட்ட சிறுவனின் உடலை கைப்பற்றியுள்ளனர்.

மகன் இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவித்து வந்த அந்த குடும்பத்தினர், மகன் இறந்ததையே நம்ப மறுத்து வந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் டெட்ராயிட் பகுதியை பிறப்பிடமாக கொண்ட இந்த தம்பதியினர் மீது அலட்சியமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக வழக்கு பதிந்துள்ளனர்.

மேலும் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட தங்களது மகணை இவர்கள் இதுவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவில்லை எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE