மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகருமான துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருக்கிறார். நித்யாமேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். அழகான காதல் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில், ‘ஓ காதல் கண்மணி’யின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசிய வீடியோ உங்கள் பார்வைக்கு..