மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன் – ஆற்றில் மிதந்து வந்த உடல் உறுப்புகள் 

547
ஜேர்மன் நாட்டை சேர்ந்த மனைவி ஒருவரின் தலையை துண்டித்து ஆற்றில் மிதக்கவிட்டு கணவனும் ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்தக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் உள்ள ஃபிராங்பர்ட் நகரை சேர்ந்த 70 வயதான தம்பதி இருவர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஜேர்மனி -ஆஸ்திரியா நாடுகளின் எல்லையில் உள்ள ட்ரவுன் என்ற ஆற்றிற்கு அருகில் சில தினங்களுக்கு முன்னர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த ஆற்று வழியாக சென்ற ஒருவர் ஆற்றில் 3 பெட்டிகள் மிதந்து வருவதை கண்டு சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

மோப்ப நாயுடன் வந்த பொலிசார், ஆற்றில் குதித்து அந்த பெட்டிகளை சேகரித்து வந்துள்ளனர்.

3 பெட்டிகளையும் திறந்து பார்த்தபோது உள்ள ஒரு பெட்டியில் 70 வயதான மூதாட்டியின் தலை துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது.

அடுத்தடுத்த 2 பெட்டிகளில் அந்த மூதாட்டியின் பிற உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

பெட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சுமார் 15 அடி தூரத்தில் பொலிசார் மீண்டும் சோதனை செய்தபோது அதே 70 வயதில் இருக்கும் ஒரு முதியவரின் சடலமும் கிடைத்துள்ளது.

சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார், ‘இருவரும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 1ம் திகதிக்குள் இறந்திருக்க வேண்டும்.

இருவரும் கணவன் மனைவியாக இருக்கலாம் என்றும், மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என கணித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 3வது நபர் யாரும் ஈடுபட்டு இருக்க முடியாது என எண்ணியுள்ள பொலிசார், குடும்ப பிரச்சனை காரணமாக இந்த கொலை மற்றும் தற்கொலை நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE