மல்லாவியில் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

265

download

மல்லாவி – வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் மல்லாவி – வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் மு/பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் பத்தாவது காலாட்படை முகாமில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை – வில்கடுவ பகுதியைச் சேர்ந்த டி.ஏ.ஏக்கநாயக்க (வயது 30) என்ற இராணுவ வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE