மழை காரணமாக இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையேயான கடைசி ஆட்டம் ரத்து

317

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது டி20 கிரிக்கெட் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் தரம்சாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, கட்டாக்கில் நடந்த 2வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் மழை காரணமாக போட்டி சிலமணி நேரம் தள்ளிவைக்கப்பட்டது.

தொடர்ந்து மழை நீடிக்கவே ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஈடன் கார்டன் மைதானத்தில் கூடி இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

SHARE