கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியை அடைந்தமையால் இந்திய அரசு மகிழ்ச்சி அடைந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமராக ரணிலும், ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மஹிந்தவின் ஆட்சியின் போது அவர் மேற்கொண்ட இரண்டு நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய அரசு அதிருப்தி கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மஹிந்த அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், அதிகமாக சீனாவின் பக்கம் மஹிந்த அரசு நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தமை இந்திய அரசை அதிருப்பதி அடையச் செய்த விடயங்களாகும்.
இதேவேளை சமகால நல்லாட்சியிலாவது தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என இந்திய அரசு எதிர்பார்த்துள்ளதாக குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.