மஹிந்த ராஜபக்ச ஊழல் மற்றும் மோசடி விசாரணைகளுக்கு உதவியளிக்க சீசெல்ஸ் அரசாங்கம்

282

 

ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவியளிக்க சீசெல்ஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

Untitled_381-480x250

சீசெல்ஸில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கொண்டிருந்ததாக கூறப்படும் கடல் கடந்த வைப்புக்கள் தொடர்பிலேயே இந்த உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமது நாடு இலங்கையின் விசாரணைகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக சீசெல்ஸின் சுற்றாடல் துறை அமைச்சர் டிட்லியர் டொக்லே (Didlier Dogley) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்துள்ள அவர், தமது நாட்டில் இலங்கையர்கள் கொண்டிருப்பதாக கூறப்படும் அனைத்து கணக்குகளை பரிசீலனை செய்ய அனுமதியளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமது நாட்டில் கணக்குகளை கொண்டிருப்போர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்தநிலையில் இலங்கையர்கள் எவராவது தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் கணக்குகளை தமது நாட்டில் கொண்டிருக்கிறார்கள் என்று சந்தேகம் இருந்தால், இலங்கை உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்றை சமர்ப்பிக்க முடியும் என்றும் சீசெல்ஸின் சுற்றாடல் துறை அமைச்சர் டிட்லியர் டொக்லே (Didlier Dogley) குறிப்பிட்டுள்ளார்.

SHARE