மாலியில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாகுதல்: 7 பேர் பலி – தொடரும் கடும் துப்பாக்கி சண்டை

320
ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று சந்தேகப்படப்படும் நபர்கள் மாலி நாட்டில் உள்ள ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்ரிக்க நாடாக மாலியின் தலைநகரிலிருந்து 600 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாவேரா நகர். இங்கு விமான நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் ஐ.நா.வின் ஊழியர்கள் தங்குவது வாடிக்கை. இந்த ஹோட்டலை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்தினார்கள். இதில் ஒரு வெள்ளை இனத்தவர், இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலியானார்கள்.

சுமார் 3 பேரை தீவிரவாதிகள் பிணய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும். ஹோட்டலில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்ந்து கடும் துப்பாக்கி சண்டை நடந்துவருதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

SHARE