மாலைதீவில் அவசரகால நிலைமை பிரகடனம்

322

மாலைதீவில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் எதிர்வரும் 30 நாட்களுக்கு அவசரகால நிலைமை அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைதீவின் சட்ட மா அதிபர் மொஹமட் அனில் இதனை அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்ததாகவும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என்ற அடிப்படையில் இவ்வாறு அவசரகால நிலைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE