மாவை சேனாதிராசா அவர்களின் அன்புத் தாயார் திருமதி.சோமசுந்தரம் தையல்பிள்ளை அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயர் அடைகிறேன்-வைத்திய கலாநிதி சி.சிவமோகன்

303

 

தமிழரசு கட்சித் தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான உயர்திரு.மாவை சேனாதிராசா அவர்களின் அன்புத் தாயார் திருமதி.சோமசுந்தரம் தையல்பிள்ளை அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயர் அடைகிறேன்.

 sivamokan
தமிழரசு கட்சித் தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான உயர்திரு.மாவை சேனாதிராசா அவர்களின் அன்புத் தாயார் திருமதி.சோமசுந்தரம் தையல்பிள்ளை அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயர் அடைகிறேன்.
ஒரு தேசியப் பற்றாளராக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துச் செயற்பட்ட அன்னார், தமிழ் தேசியத்திற்காகச் செய்த பணிகள் அளப்பரியன. அகிம்சை வழியில் தமது பங்களிப்பை அளித்துவந்த அன்னார் அது முன்னர் பலனளிக்காத நிலையில், தீவிர போக்கிற்கும் தமது ஆதரவை வழங்கியிருந்தார். இவரது குடும்பம் அரசியல் பின்னனி அற்றதாக இருந்த போதிலும், தமிழ் இனத்தின் விடுதலைக்காக தனது மகன் சேனாதிராசா அவர்களை முதுபெரும் தமிழரசு கட்சியின் உறுப்பினராக்கி, தமிழினத்தின் விடுதலைக்காக அவரை அர்ப்பணித்தவர் என்ற பெருமை அன்ihரயே சாரும்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி, அன்னாரின் பிரிவால் துயருறும் உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வைத்திய கலாநிதி சி.சிவமோகன்
பாராளுமன்ற உறுப்பினர் – வன்னி மாவட்டம், மற்றும்
இணைத் தலைவர் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
முல்லை மாவட்டம்
SHARE