மீண்டும் 20 ஐ.எஸ் வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டது!

287
 

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க முயன்ற 20 பேரின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க முயன்ற 20 பேரின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஈராக், சிரியாவில் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் உள்ள சில இடங்களை ஈராக் படைகள் மீட்டு வருகின்றனர். சமீபத்தில் ரமாதி நகர் மீட்கப்பட்டது.

தற்போது ஈராக்கின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல் நகரை மீட்பதற்கு ஈராக் படைகள் தொடர் தாக்குதலை தொடங்கி உள்ளன. அவர்களுக்கு பெரும் உதவியாக அமெரிக்க கூட்டு படைகள் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் குண்டு வீசி தாக்கி வருகின்றன.

சிரியாவில் உள்ள ராக்கா நகர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைநகரமாக உள்ளது. இந்த நகரில் ரஷியா, அமெரிக்க படைகள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருவதால் தாக்குபிடிக்க முடியாமல் ஏராளமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மொசூல் நகருக்கு சென்றனர்.

இப்போது மொசூல் நகரில் நடக்கும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கின்றனர். தப்பிக்க முயற்சி செய்பவர்களை தேடி பிடித்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றி வருகின்றனர்.

சமீபத்தில் படையில் இருந்த தீவிரவாதிகள் சிலர் மொசூல் நகரில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களில் 20 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரையும் வரிசையாக நிறுத்தி தலையை துண்டித்து கொலை செய்தனர். பொதுமக்கள் மத்தியில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கிலாந்துக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிவிப்பில் பாரீஸ் நகரில் நடந்த தாக்குதலை விட மிகப்பெரிய தாக்குதலை லண்டன் நகரில் நடத்த போகிறோம். இதன் மூலம் இங்கிலாந்தை நிலைகுலைய செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE