மீரியபெத்த மண்சரிவுக்கான காரணம் கண்டுபிடிப்பு மக்கள் வாக்குமூலம்!

434
கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரில் புதையுண்ட மக்களை மீட்க இராணுவத்தினர் கடந்த 6 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்சரிவில் 400 பேர் வரை காணாமல்போனதாக கூறப்பட்டாலும், இதுவரையில் 6 சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகையில்,

2005ம் ஆண்டிலிருந்து மலை வெடித்து இருந்தது. வேறு இடத்திற்கு எழும்புமாறு கூறியிருந்தார்கள். ஆனால் வீடு கொடுக்காமல் இந்த மக்கள் எங்கே போவது.

மக்கள் புதையுண்ட இடத்தை விட்டு இராணுவத்தினர் வேறு இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

5 அடி ஆழத்தில் தான் புதையுண்டு இருப்பார்கள் என அவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் ஆய்வு மூலம் கண்டுபிடிப்பு

கொஸ்லாந்த மீரியபெத்தயில் மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் அங்கு வசித்த மக்கள் அப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மரக்கறி உற்பத்தி செய்தமையே என ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

இற்றைக்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய ஓரிடம் என எல்லையிடப்பட்டு தூண்களும் நடப்பட்டு இலக்கமிடப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பேராதனை பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானப் பேராசிரியர் கபில தஹநாயக்கா, மேல் நீர்பரப்பு பாதுகாப்பு திட்ட முன்னாள் பணிப்பாளரும் சுற்றாடல் ஆய்வாளருமான டி. ரீ. முனவீர ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இப்பகுதியில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட கூடாதென எட்டு வருடங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகத்துக்கும் அறிவிக்கப் பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயமாக அதிகாரிகளும், தோட்ட மக்களும் கவனம் செலுத்தவில்லை இப்பகுதியில் மரக்கறி உற்பத்தி வியாபித்து உள்ளதாகவும் முனவீர தெரிவித்தார்.

 

SHARE