மேற்படி நிகழ்வு தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் ஹொலிருட்
தோட்டம் நுவரெலியா பிராந்திய பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி
பொறுப்பு மற்றும் பாம் நிறுவனத்தின் பங்களிப்புடன் 417
முதியோர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அடையாளங்காணப்பட்ட 52
பெரியோர்களுக்கு கண் படல சத்திர சிகிச்சையும் ஏனைய 92
முதியோர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நேற்று 04-
08-2016 ஆம் திகதி காலை 11.30 மணிக்கு நுஃஹொலிருட் தமிழ்
வித்தியாலயத்தில் தோட்ட மனிதவள அபிவிருத்தி குழுவினரின்
ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஹொலிருட் தோட்ட சிரேஷ்ட
முகாமையாளர் திரு. ன.அ.ப. பண்டார தஸநாயக்கஇ பிரதி முகாமையாளர்
திரு. வெனுர பெல்பொலஇ உதவி முகாமையாளர் திரு. சு.னு. ரயான்
கோனவலஇ கிராம அலுவலர் திரு. பிரபாகரன்இ தோட்ட வைத்தியர்
திரு யு.முத்தையாஇ குடும்ப நல உத்தியோகத்தர் திரு.
னு.பிரேம்காந்த் பாம் நிறுவன உத்தியோகத்தர் திரு. டீ.
ரவிக்குமார் தோட்டத்தின் அனைத்து பிரிவுகளின் சிறுவர் அபிவிருத்தி
நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் 150 ற்கு மேற்பட்ட
முதியோர்களும் கலந்து கொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
மு. ராமச்சந்திரன்