மும்பையில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

331

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 8-வது தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தது. இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து மும்பை நாக்பாடாவில் உள்ள பாம்பே இன்டர்நேசனல் ஓட்டலில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஓட்டலில் உள்ள ஒரு அறையில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.            

போலீசார் வருவதை பார்த்ததும் அந்த அறையில் இருந்தவர்கள் தப்பித்து ஓட முயன்றனர். ஆனால் போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அந்த அறையில் இருந்த 51 செல்போன்கள் மற்றும் அக்டிவேட் செய்யப்பட்ட 51 சிம் கார்டுகள் மற்றும் 2 மடிக்கணினிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.            

கைது செய்யப்பட்ட 6 பேரையும் நேற்று விடுமுறை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE