மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு: 9 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவர் மரணம்

286
கடந்த 2006ஆம் ஆண்டு மும்பை ரயில்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி கோமா நிலைக்கு சென்றவர் நினைவு திரும்பாமலேயே உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2006 ஆண் ஆண்டு யூலை மாதம் 11 ஆம் திகதி மும்பை ரயில்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.இதில், சர்ச்கேட்-விரார் இடையேயான ரயிலில் பயணித்த சவந்த், குண்டு வெடிப்பில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவந்த், கடந்த 9 ஆண்டுகளாக கோமாவிலேயே இருந்தார். இவர், கோமாவில் சென்ற நிலையில், மருத்துவ உதவியுடன் இவரது மனைவி ப்ரீத்தி தனது மகள் பிரணதியை (8) பெற்றெடுத்தார். பிரணதிக்கு நினைவு தெரிந்தது முதலே, தனது தந்தையை கோமாவில்தான் பார்த்து வந்தார். இந்நிலையில், நினைவு திரும்பாமலேயே இன்று காலை சவந்த் உயிரிழந்தார்.

SHARE