வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் கீழ் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்ட சங்கங்களை 26-04-2016 செவ்வாய் மாலை 2.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் சந்தித்து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்களும், அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும், மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும், முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட சங்கங்களின் தலைவர் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டிலே வழங்கப்பட்ட சில திட்டங்கள் தொடர்பிலும், அதனைப் பெற்றுக்கொண்ட சங்கங்களின் நிலைகள் தொடர்பிலும், தற்போது திட்டங்கள் வழங்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிநிதிகளுடன் வழங்கப்பட்ட திட்டங்களை சரியான கண்காணிப்புடன் நடத்தும் நோக்கிலுமான விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.