முஸ்லிம் மத கலாச்சாரத்தையும் முஸ்லிம் காங்கிரசையும் காப்பாற்ற துப்பில்லாத அமைச்சர்கள் மூன்று அல்ல பத்தாயி உடைந்தால்தான் என்ன?-அதிர்ச்சியில் ஹக்கீம்மாம்

392
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் ஓரிரு நாட்களுக்குள் மூன்றாக உடைந்து சிதறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
hakeem-mahinda_280107_CI

தற்போதைய நிலையில் அமைச்சர் பஷீர் சேகுதாவூது தலைமையில் கட்சியின் ஒரு குழுவினர் அரசுடன் நேரடியாக ஐக்கியமாகும் முடிவில் உள்ளனர். இதன் மூலம் தங்களுக்கு சுயலாபங்களை அடைந்து கொள்ள முடியும் என்று இவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இன்னொரு குழுவினர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கத் தலைப்பட்டுள்ளனர். பைசல் காசிம், அஸ்லம் மற்றும் ஹரீஸ் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே பொருத்தமான தருணம் வரும்வரை எந்தப்பக்கத்துக்கும் ஆதரவு தெரிவிக்காமல் காலத்தைக் கடத்தும் யுக்தியைக் கையாள கட்சித் தலைவர் ஹக்கீம் முடிவெடுத்துள்ளார். இதற்கு ஆதரவாக செயலாளர் ஹசனலி, எம்.எஸ். தௌபீக் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹக்கீமின் அணியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடாக ஆளுங்கட்சியுடன் பேரம் பேசல் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் எதிர்வரும் புதன்கிழமைக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிளவு குறித்த தகவல்கள் உத்தியோகபூர்வமாக வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

SHARE