யாழில் இரண்டரை கோடி பெறுமதியான் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

237

 

யாழில் இரண்டரை கோடி பெறுமதியான் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை, மணற்காடு பகுதிகளில் மது வரி திணைக்களமும் பொலிஸாரும்  கடற்படையின் உதவியுடன்  130 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்

இதன் பெறுமதி சுமார் 2 கோடியே 60 லட்சம் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.

கஞ்சாவை மொத்தமாக விநியோகிக்க தயாராக இருந்த  5 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து யாழப்பாணத்திற்கு கஞ்சாவை கடத்தும் நோக்கில் கடலில் இந்திய படகில் இருந்து யாழ்ப்பாணத்ததைச் சேர்ந்த ஒருவரின் படகிற்கு கஞ்சாவை மாற்றியதாக சந்தேகிக்கப்படும்   படகினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

 

SHARE