யாழில் கல்வி வீழ்ச்சிக்கு காரணம் குற்றச் செயல் அதிகரிப்பே – மாவை சேனாதிராஜா

326

 

யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களினாலேயே கல்வி மட்டத்தில் முதலிடத்தில் இருந்த யாழ்ப்பாணம் தற்போது பின்தங்கி காணப்படுவதற்கு காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வலிகாமம் வலய ஆசிரிய மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆசிரியர் மாநாடு நேற்று இடம்பெற்றுள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்தின் எதிர்கால சந்ததியினர் போதைவஸ்துக்கு அடிமையான சூழலிலேயே வாழ்கின்றார்கள்.

யுத்த காலத்தில் கூட தளராமல் இருந்த யாழ்ப்பாண கல்வி மட்டம் தற்போது பாரியளவு வீழ்ச்சி கண்டுள்ளது.

எனவே முற்று முழுதாக போதைக்கு அடிமைப்பட்டுள்ள மாணவ சமூகத்தை மீட்டு மீண்டும் யாழ்ப்பாண கல்வி நிலையை உயர்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE