யாழ்ப்பாணம் றக்கா றோட் பகுதியில் வீட்டிலிருந்து பெண்ணின் சடலமொன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் 32 வயதுடைய சிவதாஸ் சிவதர்சினி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் உறவினர்கள் கோவிலிற்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது இவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என பொலிஸாரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.