ராஜகிரியவில் உள்ள ‘சதாஹம் செவன’ சர்வதேச பௌத்த நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கமே காரணம் என்று ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது

394
ராஜகிரியவில் உள்ள ‘சதாஹம் செவன’ சர்வதேச பௌத்த நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கமே காரணம் என்று ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது

அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் உட்பட்ட 25 பௌத்த பிக்குகள் இந்த நிலையத்தில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையத்துக்கு முன்னால் இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது அரசாங்கக்கட்சியின் கோட்டே மாநகர முதல்வர் உட்பட்டவர்கள் அதில் பங்கேற்றிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பௌத்த பிக்குகளை நிந்திக்கும் வகையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

SHARE