ரிசாட்டுக்கு ஆப்படித்தார் ரவூப் ஹக்கீம்

321

 

மட்டக்களப்பு, கல்குடாத் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் அன்வர் நௌஷாத் உட்பட 50 பேர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில்  நேற்று வியாழக்கிழமை மாலை இணைந்துள்ளதாக மு.கா.வின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

post-223

கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் மு.கா.வின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்; முன்னிலையில் தாம் மு.கா.வில் இணைந்துள்ளதாக இவர்கள் அறிவித்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஷிப்லி பாறூக், ஏ.எல். தவாம், எச்.எம். லாஹிர், ஆரிப் சம்சுதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.

SHARE