ரெய்னா, கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து வளர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை

308

விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் ஆட்டத்தை பார்த்து தனது திறமையை வளர்த்துக் கொண்டதாக பாகிஸ்தானின் கிரிக்கெட் வீராங்கனை பிஸ்மா மரூப் தெரிவித்துள்ளார்.

இடது கை துடுப்பாட்ட வீராங்கனையாக விளங்கும் பிஸ்மா மரூப் பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியில் கடந்த 2006ம் ஆண்டில் அறிமுகமானார்.

தொடர்ந்து விளையாடி வரும் அவர், தற்போது வங்கதேசத்திற்கு எதிராக டி20 தொடரில் 109 ஓட்டங்களும், ஒருநாள் தொடரில் 133 ஓட்டங்களும் எடுத்தார். இந்த தொடரில் தொடர்ச்சியாக மூன்று ஆட்ட நாயகி விருது பெற்று அசத்தினார்.

இந்நிலையில் கோஹ்லி மற்றும் ரெய்னாவின் ஆட்டத்தை பார்த்து தான் திறமையை வளர்த்துக் கொண்டதாகவும், அவர்களின் ஆட்டம் நிலைத்து நின்று ஆட பெரிதும் உதவியாக இருப்பதாகவும் பிஸ்மா மரூப் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் கிளார்க்கின் மிகத் தீவிர ரசிகை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE