வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால் ரூபா 2.5 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முத்தையன்கட்டு நன்னீர் மீனவர் பொதுநோக்கு மண்டபம் இன்று மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு…
முல்லைத்தீவு மாவட்ட முத்தையன்கட்டு ஜீவநகர் குளத்தடியில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால், நன்னீர் மீன்பிடியாளர்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்திற்க்கமைவாக குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் ரூபா 2.5 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முத்தையன்கட்டு நன்னீர் மீன்பிடி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபத்தை, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களால் 26-04-2016 வியாழன் காலை 11.30 மணியளவில் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது…
நிகழ்விற்கு அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரனாதன் அவர்களும் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திரு.டி.சிவராஜலிங்கம், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் திரு.ஜெகானந்தன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அதிகாரி திரு.என்.சலீவன் முத்துஐயன்கட்டு மீனவ அமைப்பின் தலைவர் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், முத்துஐயன்கட்டு குளத்தையொட்டிய நன்னீர் மீன்பிடி சங்கங்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வினை அமைச்சின் செயலாளர் திரு எஸ்.சத்தியசீலன் அவர்கள் தலைமைதாங்கினார்.