வட-கிழக்கு சுயாதீனமாகப் பிரிவதற்கு தயார், இது எமது இன்றைய திட்டமல்ல, நீண்ட காலத் திட்டம்- மன்னார் ஆயர் இராயப்பு யோசப்

430

தென்னிலங்கையில் இருந்து வட-கிழக்கு சுயாதீனமாகப் பிரிவதற்கு தயார், இது எமது இன்றைய திட்டமல்ல, நீண்ட காலத் திட்டம், அதற்கு எம்மிடம் அனுபவம் உள்ள யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தகுதியானவர் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை தெரிவித்தார்.

பரிசுத்த பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்யும்வேளை அதனை இலங்கை அரசாங்கம் அரசியலாக்கலாம், ஆனால்  நாம் அனுமதிக்க மாட்டோம்.

அவரின் வருகை தமிழரின் கண்ணீருக்கு பதில் தருவதை யாரும் தடுக்க முடியாது என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

 

SHARE