வனப்பகுதியில் வைத்து சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது

246

download-1

12 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமியின் வீட்டில் கூலிக்கு வேலை செய்துள்ள ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர், சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சந்தேகநபர் சிறுமியை ஏமாற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்து சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபரை மொரவக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE