வள்ளுவர் புரத்தில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு பொதுநோக்குமண்டபம் திறந்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்

298
முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு, வள்ளுவர் புரத்தில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் 01 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், வள்ளுவர் புரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தை, 26-04-2016 செவ்வாய் மாலை 4.00 மணியளவில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையின் முல்லை மாவட்ட உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்களும், அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும் மற்றும் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
7d1f7f45-5116-4f11-bb5e-7eff35eee0e3
8da8aa5d-d8f5-4cbc-97cd-a04827d12895 9c9e5e72-22d4-4228-a93e-eb6106bd7180 9f2e8853-81d5-4241-9c2e-f5917b4405a3
SHARE