வாலிபரின் அருவருப்பான தோற்றத்தால் ஆத்திரம் அடைந்த நபர்கள்: குடிபோதையில் சரமாரியாக குத்தி கொன்ற கொடூரம்

323
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம் நபர் ஒருவரின் அருவருப்பான தோற்றத்தை கண்டு ஆத்திரம் அடைந்த இரண்டு குடிகாரர்கள் அவரை பொது இடத்தில் சரமாரியாக குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிஸ் அருகில் உள்ள லா பிளைன் என்ற ரயில் நிலையத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.கடந்த ஞாயிறு பிற்பகல் 2 மணியளவில், 16 முதல் 17 வயதுடைய 5 நபர்கள் ரயில் நிலைய நடைபாதையில் நடந்து சென்றுள்ளனர்.அப்போது, அந்த நடைபாதையை ஒட்டி வீடில்லாத இரண்டு குடிகாரர்கள் போதையில் தள்ளாடிய நிலையில் இருந்துள்ளனர்.

இந்த இரண்டு நபர்களை 5 வாலிபர்கள் கடந்தபோது அவர்களில் ஒருவர் மிக மோசமாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு குடிகாரர்கள், அந்த வாலிபரை பிடித்து கீழே தள்ளி இரும்பி கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

பின்னர், கூரான ஆயுதத்தை கொண்டு அவருடைய மார்பில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

பலத்த காயமடைந்த அந்த நபர், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடி துடித்து இறந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த பொலிசார், அங்குள்ள கண்காணிப்பு கமெரா மற்றும் பிற பயணிகளிடமிருந்து சேகரித்த தகவல்களை கொண்டு இரண்டு குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.

இதே பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு இரண்டு வாலிபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது மீண்டும் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளதால், இது இனவெறி தாக்குதலா என்ற கோணத்தில் பொலிசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE