விசஊசி தொடர்பில் 3ம் வாரத்தில் 22 முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனை!

232

use

விச ஊசி விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் மூன்றாம் வாரத்தில் 22 பேர் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் மூலம் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.

விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் முதலாம் வாரம் கடந்த 2ம் திகதி வெள்ளிக்கிழமையும், இரண்டாம் வாரம் 9 ம் திகதி வெள்ளிக்கிழமையும், மூன்றாம் வாரம் 15, 16 ம் திகதிகளும் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் வடமாகாண வைத்தியசாலைகளில் இடம்பெற்றன.

அதில் யாழ் மாவட்டத்தில் 19 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 23 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 43 பேரும், வவுனியா மாவட்டத்தில் 06 பேரும், மன்னார் மாவட்டத்தில் 04 பேருமாக 95 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் 2ம் திகதி 26 பேரும், 9ம் திகதி 47 பேரும், 15, 16ம் திகதிகளில் 22 பேரும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, எதிர்காலத்தில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவ பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE