விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு குவைத் நாட்டின், ஹசாவி பகுதியில் நான்கு இலங்கை பெண்கள் கைது

319

 

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு குவைத் நாட்டின், ஹசாவி பகுதியில் நான்கு இலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

sri-lankan

குவைத்தில் இயங்கும் ஆண்கள் பாதுகாப்பு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கைது செய்யப்பட்ட பெண்கள் அந்நாட்டு குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குற்ற விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இலங்கை பெண்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை பெண்களும் தம்மை தொழிலுக்கு அழைத்துச் சென்ற நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ள அதேவேளை, இந்த பெண்கள் ஏற்கனவே காணாமல் போயுள்ளார்கள் என்று நிறுவனம் குறித்த நான்கு பெண்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் குவைத் நாட்டின் குற்ற விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE