10 தலிபான்கள் கழுத்தறுத்து கொலை: ஐ.எஸ் அமைப்பின் வெறிச்செயல்

298
 

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் அமைப்பு தலிபான்கள் 10 பேரின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் கொண்டுள்ள தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் புகுந்த ஐ.எஸ் தீவிரவாதிகள், தலிபான்கள் 10 பேரை வெட்டிக்கொன்றுள்ளனர் என்று ஆப்கான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தக் கொலை நாட்டின் கிழக்குப் பகுதியில் நடைபெற்றுள்ளதாகவும் ஆப்கான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகளால் இவ்வகையில் தால்பான்கள் கொல்லப்படுவது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.

SHARE