1400 ஆண்டு கிறிஸ்தவ மடத்தை தரைமட்டமாக்கிய ஐஎஸ் தீவிரவாதிகள் 

308
ஈராக்கில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ துறவிகள் மடத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் தரைமட்டமாக்கியுள்ளனர்.ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள செயின்ட் எலிஜா என்ற கிறிஸ்தவ துறவிகள் மடமானது 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இந்த மடத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர், இடிக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இடிக்கப்பட்ட பின்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை கிறிஸ்தவ பாதிரியார் பால் தபித் ஹபிப் வெளியிட்டுள்ளார், செயற்கைகோள் படங்களும் இதையே உறுதி செய்துள்ளன.

இதுகுறித்து அவர் கூறுகையில், மொசூல் நகரில் கிறிஸ்தவ வரலாறு அழிக்கப்பட்டு விட்டதாகவும், ஈராக்கிலிருந்து தங்களை வெளியேற்றுவதற்காக சதித்திட்டம் தான் இதுவும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு மொசூல் நகரை கைப்பற்றிய தீவிரவாதிகள், அங்குள்ள வரலாற்று சிறப்பு மிக்க, கலாச்சார கட்டுமானங்களை அழித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE