150 கிராமவாசிகள் ஆற்றில் மூழ்கடித்தும், சுட்டும் கொலை: நைஜீரியாவில் போகோஹரம் அட்டூழியம்

310
நைஜீரியாவில் ஐ.எஸ். பாணியில் ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் தீவிரவாத இயக்கம் போகோஹரம். இந்த இயக்கம் பொது இடங்கள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்து வருகிறது.

நேற்று நைஜீரியா நாட்டின் வடகிழக்கு மாநிலமான யோபியில் உள்ள கிராமத்திற்கு மோட்டார் பைக்குகளில் வந்த போகோஹரம் தீவிரவாதிகள், அக்கிராம மக்கள் மீது கண் மூடிதனாமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு பாதி பேர் பலியான நிலையில், மீதி பேர் தங்கள் காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடியுள்ளனர்.

அப்போது அருகில் இருந்த ஆற்றில் மூழ்கி பலர் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் மொத்தமாக 150 பேருக்கு மேற்பட்டவர்கள் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

SHARE