20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இலங்கை தோல்வி

332
இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் சர்வதேச போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அகமது ஷேசாத், சோயிப் மாலிக், உமர் அக்மல் ஆகிய மூவரும் தலா 46 ரன்கள் வீதம் எடுத்தனர்.

இதில் உமர் அக்மல் தனது ஸ்கோரில் 3 சிக்சரும், 3 பவுண்டரியும் விளாசினார். அடுத்து இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மிலிண்டா ஸ்ரீவர்த்தனே 35 ரன்கள் எடுத்தார். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது

SHARE