333
 

ronaldo_neymar_002

உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்ட வீரராகும் தனித்திறமை யாருக்கு உள்ளது என்று பிரேசிலின் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர் ரொனால்டோ கருத்து தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய ரொனால்டோ,

ஆனால் அடுத்து வரும் காலங்களில் பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் நேமார், ஜாம்பவான் வீரர்களான இவர்கள் இருவரையும் விட சிறந்து விளங்குவார் என்றார்.

அடுத்த சில தினங்களில் ஃபிஃபா அமைப்பு உலகின் சிறந்த வீரர்களுக்கான இறுதிப் பட்டியலை வெளியிடவுள்ளது.

தொடர்ந்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிறந்த வீரர் யார் எனவும் அறிவிக்க உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த வீரர்களாக 1994 முதல் 2007 வரையான காலகட்டத்தில் பிரேசில் வீரர்களே 8 முறை வந்துள்ளனர்.

ஆனபோதும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3 முறையும் மெஸ்ஸி 4 முறையும் இந்த சிறப்பு விருதை தட்டிச் சென்றுள்ளனர்.

SHARE