வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர் – தப்பிய ஓட்டுனரை தேடும் பொலிசார் 

294
பிரித்தானியாவின் பிரைட்டன் பகுதியில் பாதசாரி முதியவரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிய ஓட்டுனரை பொலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.பிரித்தானியாவின் பிரைட்டன் பகுதியில் 53 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையின் ஓரமாக சம்பவம் நடந்தபோது நடந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது வேகமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் அந்த முதியவர் 40 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளார்.

பின்னர் அதே சாலையில் வந்த வேறொரு வாகனத்தின் மீது விழுந்து அங்கிருந்து தரையில் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே அந்த முதியவர் மீது மோதிய வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தினை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால் ஆச்சரியப்படும் விதமாக 40 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டும் பலமான காயங்கள் ஏதும் இன்றி அந்த முதியவர் தப்பியது மட்டுமின்றி,

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே அங்கிருந்து அவர் வெளியேறவும் செய்துள்ளார்.

முதியவர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் மற்றும் அதன் ஓட்டுனர் மீது வழக்கு பதிந்துள்ள பொலிசார்,

அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தகவல் தெரியவரும் பொதுமக்களும் இந்த வழக்கில் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரியுள்ளனர்.

SHARE