பிரதேச சபைக்கு போட்டியிட்ட 36 வயதான கயான் டிலாந்த என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்றிரவு கொலை

307

 

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கடந்த முறை நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பத்தேகம பிரதேச சபைக்கு போட்டியிட்ட 36 வயதான கயான் டிலாந்த என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பத்தேகம, எலகந்த,வத்துராவ, அங்கொட்டுவெல்ல வீதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இனந்தெரியாத நபர் கூரிய ஆயுதம் ஒன்றில் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நிலையில் காணப்பட்ட டிலாந்தவை பிரதேசவாசிகள் இணைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

கொலை சம்பவம் குறித்து கேள்விப்பட்டதுடன் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட நேற்று இரவு பத்தேகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

உயிரிழந்த கயான் டிலாந்த பிரதேசத்தில் சமூக சேவையில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE