580 பயனாளிகளுக்கு கூரைத்தகடுகள்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் நுவரெலிய பிரதேச பயனாளிகளுக்கு மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் கூரைத்தகடுகளை பகிர்ந்தளித்தார்
நுவரெலியா மாவட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியகாரியாலயத்தில் 23.07.2016 அன்று சனிக்கிழமை 580 பயனாளிகளுக்கு 6000 கூரைத்தகடுகள் வழங்கப்பட்டது நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் ராஜாராம். உதயகுமார் மற்றும் ட்ரஸ்ட் நிருவனத்தின் தலைவர் புத்திரசிகாமனி உட்பட பலர் கலந்துகொண்டனர்